தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜுக்கும் இடையே எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்ட விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளதாக தகவல் வருகிறது. இந்நிலையில் ஆணையர் ஜார்ஜ் அதிரடியாக அந்த பதவியில் இருந்து தூக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொருவர் அமர்த்தப்பட உள்ளார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெ.கே.திரிபாதி, கரன் சின்ஹா மற்றும் சஞ்சய் அரோரா ஆகியோரின் பெயர்களை டிஜிபி பரிந்துரைத்துள்ளார். அதில் சஞ்சய் அரோராவை ஓபிஎஸ் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவை ஆளுநரின் அறிவுரையை பெற்ற பின்னர் தலைமைச்செயலாளர் இன்று மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வருகிறது.