தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சென்னை-தூத்துக்குடி ரெயில் பெட்டியில் சிறுவன் ஒருவன் காலில் இரும்பு சங்கிலியுடன் அமர்ந்திருந்தான். அச்சிறுவனை மீட்டு ரயில்வே காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில், தந்தை ஜோசப், மகன் சாமுவேல் ஜார்ஜை(16) இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக சிறுவன் தெரிவித்தான். இரும்பு சங்கிலியை கல்லால் அடித்து உடைத்து தப்பித்து, சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்குச் செல்வதற்காக ரயிலில் ஏறியதாக சிறுவன் காவல் துறையினரிடம் கூறினான்.
இதுகுறித்து அச்சிறுவனின் தாயார் மேரி, அவனுக்கு மனநிலை சரியில்லை, சாத்தான் பிடித்துள்ளது எனக் கூறி கடந்த சில ஆண்டுகளாக கணவர் அடிக்கப்படுவதாகவும், அதை தான் தட்டிக்கேட்டால் எனக்கும் சாத்தான் பிடித்திருப்பதாகத் திட்டுவதாகவும் கூறினார்.