தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வந்த தமிழ்செல்வன், திருட்டு நகைகளை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தார். இதனால் அவமானம் தாங்காத மனைவி, மூன்று மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
ஆழ்வார் திருநகரில் மனைவி ஜெயா(50), மகள்கள் சக்திமாலா(22), கலைவாணி(20), காயத்ரி(17) ஆகியோருடன் வசித்து வந்தார் தமிழ்செல்வன். இந்நிலையில் இன்று காலை ஜெயாவும், அவரது மூன்று மகள்களும் வீட்டினுள் தூக்கில் பிணமாக தொங்கினர்.
மேலும் அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில், அப்பா நாங்கள் அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் என திரும்ப திரும்ப சொல்லிவருகிறோம். ஆனால் நீங்கள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகிறீர்கள். எனவே எங்களுக்கு உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. இறைவனிடம் செல்லுகிறோம் என எழுதப்பட்டிருந்தது.