கருணாநிதியுடன் பரூக் அப்துல்லா திடீர் சந்திப்பு

புதன், 10 பிப்ரவரி 2016 (00:30 IST)
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை, பரூக் அப்துல்லா சந்தித்துப் பேசினார்.
 

 
சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியை ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா இன்று சந்தித்து பேசினார்.
 
இது நட்பு ரீதியான சந்திப்பு என்ற தகவல் வெளியானாலும், தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரூக் அப்துல்லா - கருணாநிதி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 
ஆனால், தான் தமிழக கூட்டணி குறித்து பேசவில்லை என்று பரூக் அப்துல்லா மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்