டெங்கு தாக்கி விவசாயி பலி

திங்கள், 30 மே 2016 (16:32 IST)
இடுக்கி மாவட்டத்தில் வண்ணபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜார்ஜ் உயிரிழந்தார்.


 

 
கடந்த 5 நாட்களாக கேரள் மாநிலம் இடுக்கி பகுதியில் பெய்த மழையால் அங்கு டெகு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 43 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் தேனியில் இருந்து இடுக்கி மாவட்டத்துக்கு தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் டெங்கு காய்ச்சலால் வேலைக்கு செல்லாமல் அச்சம் அடைந்துள்ளனர்.
 
மேலும் மூணாறு சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற தொடங்கியுள்ளன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்