19 வயது இளைஞருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்....கணவரைக் கொன்ற மனைவி !

சனி, 27 பிப்ரவரி 2021 (23:20 IST)
19 வயது இளைஞருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவரைக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வசித்து வருபவர் தேவி. இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் அபிஷேக்குடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தன கணவரைக் கொல்ல திட்டமிட்டு,  அவரைக் கொன்று ஒரு சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசியுள்ளார். பின்னர் 13 நாட்களுக்குப் பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில் அபிஷேக் மற்றும் தேவியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்