கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர தேமுதிக செயலாளராக இருப்பவர் சுப்பிரமணியம். இவர், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 12 ஆவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார்.
இதையறிந்த, மேட்டுப்பாளையம் நகர அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், நகர செயலர் வான்மதி சேட் தலைமையில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து, நகர தேமுதிக செயலர் சுப்பிரமணியத்தை தேடி வந்தனர். இந் நிலையில், 3 நாட்களாக தலைமறைவாக இருந்த சுப்பிரமணியத்தை திங்கள் கிழமை கைது செய்த காவல்துறையினர், அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.