அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீக்கப்பட்ட இந்த சம்பவம், இது ஒரு பொறுப்பற்ற அரசு கோமாளித்தனமான அரசு என்பதற்கு சான்று என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத ஜெயலலிதாவால் அதிமுகவுக்கு வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது கூறுகையில், "வெள்ளத்தில் பொருட்களை இழந்த மக்களுக்கு தமிழக அரசு மானிய விலையில் வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங் மெஷின், மின்விசிறி ஆகியவற்றை வழங்கவேண்டும். அத்துடன் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வழங்கவேண்டும்.
அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீக்கப்பட்ட இந்த சம்பவம், இது ஒரு பொறுப்பற்ற அரசு கோமாளித்தனமான அரசு என்பதற்கு சான்று. எதற்கெடுத்தாலும் அம்மா புராணம் தான் பாடுகின்றனர். இது ஹிட்லர் ஆட்சியைத் தான் ஞாபகப்படுத்துகிறது.