சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த வாரம் இரண்டு கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் கடலில் மீன்கள், ஆமைகள் என எராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியது.
கப்பல் விபத்து பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து கச்சா எண்ணெய் அகற்றுவதற்கு உதவியதற்கு மிகவும் பாராட்டுக்கள். தமிழக மாணவர்கள் இந்தியாவிற்கே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர், என்றார்.