ஆவடியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

திங்கள், 4 ஜூலை 2016 (16:00 IST)
ஆவடியில் என்ஜினீயரிங் மாணவர், தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது தாயார் திட்டியதில் விரத்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.


 

 
ஆவடி ஆனந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார்(22) என்பவர் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.
 
சரத்குமார், தேர்வில் 5 பாடங்களில் தோல்வி அடைந்து சரியாக படிக்காத காரணத்தினால் கல்லூரி நிர்வாகம் அவரது தாயை அழைத்து வரும்படி கூறியுள்ளனர்.
 
அதற்கு சரத்குமாரின் தாய் தேவி, ‘நான் உன் தந்தை இல்லாத போதும் உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன், நீ சரியாக படிக்காமல் இப்படி இருக்கிராயே’ என்று கேட்டுள்ளார்.
 
இதில் விரத்தி அடைந்த சரத்குமார் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்