எலக்ட்ரானிக் மாஸ்க்கை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி!

ஞாயிறு, 22 ஜனவரி 2023 (12:29 IST)
எலக்ட்ரானிக் மாஸ்க்கை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி!
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் எலக்ட்ரானிக் மாஸ்க் கண்டுபிடித்துள்ளார். 
 
தமிழகத்தின் குன்னூர் என்ற பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது கனடாவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அவர் எலக்ட்ரானிக் முக கவசத்தை கண்டுபிடித்து உள்ளார். இந்த முக கவசம் 99 சதவீத கிருமிகளை தடுப்பதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
இந்த எலக்ட்ரானிக் முக கவசம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்