பறக்கும் ரயில் என்று அழைக்கப்படும், மேம்பாலம் வழியாச் செல்லும் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிவரை சென்று வருவது வழக்கம்.
அதன்படி, சென்னை வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்து ரயில், கலங்கரை விளக்கம் அருகே மதியம் 12.30 மணியளவில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.