அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்தானதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ் லக்கானி, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜுன் 19-ஆம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.
மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டசபை உறுப்பினர் சீனிவேல் காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதை சட்டமன்ற செயலர் அறிவிப்பார் என்றும். தமிழகத் தேர்தலுக்காக இதுவரை ரூ.210 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்களுக்காக ரூ.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.