சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியிருந்த சுதாகரனுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து சசிகலா, இளவரசி ஆகியோருடன் சேர்ந்து சுதாகரனும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஆஜராக சுதாகரனுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்று சுதாகரன் ஆஜராகாததால், அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பெங்களூர் சிறையில் உள்ள சுதாகரனை ஜூன் 7-ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.