இந்நிலையில், கட்சி விதிமுறைகளை மீறி, சசிகலா நடராஜன் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவரது நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது. மேலும், அவரது நியமனம் பற்றிய ஆவணங்கள் இதுவரையிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.