அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
"சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதி என்பதால் அதிமுக தலையில்லாத கட்சியாகிவிடும். எனக்கு வாழ்க்கை கொடுத்தது ராணிப்பேட்டை. 1977 - 1980ம் ஆண்டு நான் இங்கு வெற்றி பெற்றேன். எம்.ஜி.ஆர். என்னை படிக்க வைத்து, 25 பவுன் தங்க செயின் கொடுத்து திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் நான் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் திமுகவில் தான் இன்றுவரை இருக்கிறேன்.
மேலும், அதிமுக தலைவருக்கு வழக்கில் தண்டனை நிச்சயம் என்பதால் அந்த கட்சி தலையில்லாத கட்சியாக போகிறது என்றும், நாம் 2016ல் எளிதாக வெற்றி பெறப்போகிறோம்" என்று கூறினார்.