இந்நிலையில், பிரேமலதா கருத்து குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பதலளித்த வைகோ, ”முற்றிலும் உண்மை. நாங்கள்தான் நேரில் போய் விஜயகாந்த்தை அழைத்தோம். எத்தனையோ கோடி ரூபாய் கூட்டணிக்காக பேசப்பட்டது என்றும், பழம் நழுவி பாலில் விழும் என்றும் பேச்சுக்கள் அடிப்பட்டன.
மூன்று மாதத்தில் புதிய ஆட்சி வரும் என்று துரைமுருகன் கூறியிருக்கிறாரே? என்று கேட்டபோது, ”ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர், கலைஞருடன் எப்போதும் உடன் இருப்பவர், ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருக்கக் கூடாது.