சரக்கு அடித்து விட்டு சாலையில் தள்ளாடிய பெண்

புதன், 2 செப்டம்பர் 2015 (18:36 IST)
பண்ருட்டியில், ஒரு பெண் மது அருந்திவிட்டு சாலையில் தள்ளாடிய படி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் சாலை வீதியில், 35 வயது பெண் ஒருவர் மது அருந்திவிட்டு தள்ளாடிய படி நடந்து வரும் சம்பவம், வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது. அதில் அந்த பெண், சாலையில் நிலக்கடலை விற்கும் பெண்ணிடம் கடலை கேட்டு தகராறு செய்கிறார். அந்த வழியாக செல்லும் ஆண்களை வாய்க்கு வந்த படி திட்டுகிறார்.

பின்னர், அவர் கோழிக்கடைக்குச் சென்று கோழிக்கறி கேட்டு, கடைக்காரர் தர மறுக்கவே அவரை கண்டபடி திட்டிவிட்டு, அருகில் இருந்த காவல்துறை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தார். அங்கிருந்தவர்கள், காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு உடனே விரைந்து வந்த காவல் துறையினர் அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் பண்ருட்டி அருகில் உள்ள சேந்தநாடுவை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவரை எச்சரிக்கை செய்த காவல் துறையினர், ஆட்டோவில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தனர்.           

இச்சம்பவம் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்