ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. அது போன்று அனுமதி அளித்தால், போலி மருந்துகளின் விற்பனைஅதிகரிக்கும். ஊக்கமருந்து, கருத்தடை மருந்து உள்ளிட்ட மருந்துகளும் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே, ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்க கோரி அக்டோபர் 14ஆம் தேதி, அகில இந்திய அளவில் நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்களின் சங்கமும் பங்கு கொள்ளும் என்றார்.