சென்னையில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனை குறித்து விவரம் தெரியாமல், சென்னை மேயர் சைதை துரைசாமி பேசுவதைப் பார்த்தால், அவர் சென்னையில்தான் உள்ளாரா? அல்லது அயல்நாட்டில் உள்ளாரா? என எண்ணத் தோன்றுகிறது என்று முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் குடம் தண்ணீர் ரூபாய் 6-க்கு விற்கப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. நிலைமை இப்படி இருக்க, குடிநீர் பிரச்சனை இல்லை என்று சென்னை மோயர் சைதை துரைசாமி கூறியுள்ளார். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அது, என்னவென்றால், சென்னை மேயர் சைதை துரைசாமி சென்னையில் தான் உள்ளாரா? அல்லது அயல்நாட்டில் உள்ளாரா? என்று.
எனவே, உண்மையை அறிந்து புரிந்து, சென்னை மேயர் சைதை துரைசாமி பேச வேண்டும். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது உயர்ந்த பொறுப்பிலே உள்ளவர்களுக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார்.