டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக டாக்டர் அருள்மொழி நியமனம்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (01:25 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக டாக்டர் அருள்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் பதவியேற்றது முதல் 6 ஆண்டுகள் அல்லது அவரது 62 வயது வரை பதவியில் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்