அதில், சிறையில் அடைக்கப்பட உள்ள சசிகலா மற்றும் இளவரசிக்கு, தலா 3 நீல நிறை சேலைகள், ஒரு தட்டு, ஒரு சொம்பு ஆகியவையும் வழங்கப்படும். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்பதற்காக அவருக்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படாது. இதைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவது போல தலையணை, படுக்கை விரிப்பு, போர்வை போன்றவைகள் வழங்கப்படும். வீட்டு சாப்பாடு உண்பதற்கு மட்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து சிறப்பு சலுகை பெறலாம். அதுவும் கோர்ட் அனுமதித்தால் மட்டுமே என கூறியுள்ளார்.