கல்லா கட்டிய டாஸ்மாக்...! இன்று ஒரே நாளில் ’மது விற்பனை’ எவ்வளவு தெரியுமா ?

வியாழன், 7 மே 2020 (19:40 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டது.

எனவே, இன்று ஒரேநாளில் மது விற்பனை ரூ. 140 கோடி முதல் ரூ.160 கோடி எனத் தகவல் வெளியாகிறது.

மேலும், சாதாரணமாக தினமும்  ரூ.80 கோடி வரை விற்பனையாகும் நிலையில் இன்று வழக்கத்திற்கு அதிகமாக வசூலாகியுள்ளதாக தகவல்.

இன்னும் தலைநகர் சென்னையில் டாஸ்மாக் திறந்தால் இன்னும்  வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்