பழ.நெடுமாறன் ஈழத்தமிழர் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை, இயற்கை வளம் காத்தல், மது ஒழிப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், ”தமிழர் எழுச்சிப் பயணத்தின் நோக்கம் வாக்கு வேட்டைக்கான பயணம் இல்லை. தமிழர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் காக்கும் பயணம். இயற்கை வளங்கள் சீரழிவு, மது விற்பனை, சந்தர்ப்பவாத அரசியல் ஆகியவற்றால் தமிழகம் சீரழிந்து வருகின்றது.