ரஜினி தன் ரசிகர்களுக்காக வெளியிட்ட அறிக்கை ஒன்றை மையப்படுத்தி ரஜினியைக் கேலி செய்யும் விதமாக முரசொலி ஒரு கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில் ‘மன்றத்திற்காக இத்தனை வருடங்கள் உழைத்த தங்களின் உண்மையான ரசிகர்கள் நியாயமானப் பதவிக்கு ஆசைப்படுவதில் என்ன தவறு? தாங்கள் மட்டும் இத்தனை வருடங்கள் சினிமாவில் நடித்ததால் மட்டுமே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?. பதவிக்காக அரசியல் இல்லை எனில் பெரியார் போல கொள்கைக்காக கட்சி ஆரம்பித்து இயக்கமாக செயல்பட வேண்டியதுதானே?’ என்று வெளியிட்டிருந்தது.
இந்த செய்தி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் ரஜினி அரசியலில் இறங்கியதும் தனது ரசிகர்களை விட்டு விலகி வேறு சிலருக்குப் பதவிகளை கொடுக்க முடிவு செய்துள்ளார் என்றும் மற்றொரு தரப்பில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் பிரிக்க திமுக சதி செய்கிறது எனவும் சர்ச்சைகள் எழுந்தன.