இது குறித்து கூறிய அவர்கள், தங்கள் குடும்பத்தினர் திமுகவில் இருப்பதால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கடன் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பி நாங்கள் திமுகவில் இருக்கிறோம் அதனால் எங்களை ஒதுக்கி வைக்கிறார்கள், நீங்கள் தான் நடவடிக்கை எடுத்து எங்கள் குடும்பத்துக்கு விளக்கேற்ற வேண்டும் என மனு அளித்திருந்தோம்.
அடுத்த ஒரே மாதத்தில் அரசு எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது, இதனால் எங்கள் குடும்பத்தில் மூன்று பேர் உயர் கல்வி படித்து வருகின்றனர். எங்கள் குடும்பத்தில் ஒளியேற்றிய முதல்வர் நூறாண்டு வாழவேண்டும் என அவர்கள் கூறினர்.