இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி எம்.பி.வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
திமுக சார்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திங்கட்கிழமை அன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி, அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த அவலத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்களின் மீதான வன்முறை, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பாலியல் கொடுமைகள் இவற்றின் அதிகரிப்பிற்கும் மதுப்பழக்கமே முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியது.