வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கனிமொழி

ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (05:50 IST)
சென்னையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை திமுக எம்.பி. கனிமொழி வழங்கினார்.
 

 
சென்னையில் உள்ள ஆதம்பாக்கம், மேற்கு வேளச்சேரி, சாஸ்திரி நகர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு இலவசமாக அரிசி, வேட்டி, சேலை, போர்வை, பாய், நாப்கின் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பாஸ்கரன் தலைமையில் நேற்று காலை சாஸ்திரி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி நிவாரண உதவிகளை வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்