திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தை பற்றிய அதிமுக உறுப்பினரின் அவதூறு பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட திமுகவினரை, சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றினர்.
இன்று காலை சட்டசபை கூடிய போது, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு குடிநீர் பற்றாக்குறை, வறட்சி உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், பேரவை தலைவர் தனபால் அனுமதி மறுக்கவே அவையில் இருந்து திமுக, தேமுதிக, இடதுசாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
கேள்வி நேரத்திற்குப் பின்னர் அவையில் மீண்டும் திமுகவினர் கூடினர். அப்போது, அவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜலட்சுமி, திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.