சிலர் வருவார்; சிலர் போவார்.. அதுதான் கூட்டணி! – துரைமுருகன் சூசகம்!

சனி, 3 அக்டோபர் 2020 (16:36 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணி நிலைக்குமா என்பது குறித்து பொதுசெயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளது போலவே திமுகவிலும் தற்போதைய கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் நீடிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சூசகமாக பேசியுள்ள திமுக பொது செயலாளர் துரைமுருகன் “தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணியிலிருந்து சிலர் வெளியே செல்லலாம்.. அதுபோல சிலர் கூட்டணியில் வந்தும் இணையலாம். வேட்பு மனுவை பெற்ற பிறகே யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என தெரிய வரும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்