கருணாநிதியும்.....செம்மலையும்.....!

வியாழன், 26 மே 2016 (15:14 IST)
தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதி, தற்காலிக சபாநாயகர் செம்மலைக்கு பணிவோடு வணக்கம் வைத்தார்.


 

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி, எம்எல்ஏவாக பதவியேற்க நேற்று காலை, 11:30 மணிக்கு தமிழக சட்டசபைக்கு வருகை தந்தார்.
 
இந்த நிலையில், எம்எல்ஏ பதவியேற்க வந்த கருணாநிதி தற்காலிக சபாநாயகர் செம்மலைக்கு பணிவோடு வணக்கம் வைத்தார். பதிலுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலையும்  மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார். இதைக் கண்டு மனம் குளிர்ந்துபோனார் கருணாநிதி. அதேபோல, இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழவைத்தது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்