தீவிர அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் பிரேமலதா?

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (03:11 IST)
தீவிர அரசியலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஓய்வு பெறப் போாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 
நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில், தேமுதிக கூட்டணி அமைக்கவும், படுதோல்வி அடைவும் காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தான் என அவரது முக்கிய கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இந்த நிலையில், கட்சியைக் காப்பாற்றவும், தன்னால் கட்சி அழிந்தது என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், தீவிர அரசியலுக்கு பிரேமலதா முழுக்கப் போட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக, தேமுதிக சார்பில் நடைபெறும் கூட்டம், அரசியல் ஆலோசனை போன்ற எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை என்றும் பிரேமலதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனலா் தான் சமீப காலமாக அவர் தேமுதிக தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லையாம். 
 
அடுத்த கட்டுரையில்