தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் இந்த தொகுதியில் தேமுதிகவுக்கு செல்வாக்கு இல்லை என்பதால், அவர் திருக்கோயிலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக, தேமுதிக கூட்டணி அமைந்தால் அந்த தொகுதி விஜயகாந்துக்கு கிடைப்பதிலும் சிறிய சிக்கல் இருக்கிறது. இதே தொகுதியை தான் திமுகவின் பொன்முடியும் குறிவைத்துள்ளார். பொன்முடி அந்த பகுதியில் செல்வாக்கு உள்ளவர். எனவே தேமுதிக, திமுக கூட்டணி அமைந்தால் இரு கட்சிகளுமே இந்த தொகுதிக்கு மல்லு கட்டும் என கூறப்படுகிறது.