விஷம் குடித்த தேமுதிக நிர்வாகி: தாக்குதல் நடத்திய தொண்டர்கள்

திங்கள், 11 ஏப்ரல் 2016 (11:29 IST)
தேமுதிக அலுவலகத்திற்கு முன்னர், தேமுதிக மக்கள் நல கூட்டணியுடன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷம் குடித்த நிர்வாகி மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.


 

 
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
 
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த தேமுதிக செயலாளர் மணியண் அங்கு வந்தார்.
 
அவர், தேமுதிகவானது மக்கள் நலக் கூட்டணியோடு இணை யக் கூடாது என்று கூறி உண்ணா விரதம் இருந்தார்.
 
அவரை தேமுதிக நிர்வாகிகள் வெளியேற்ற முயன்றனர். அப்போது மணியன், விஜயகாந்திற்காக உயிரையும் கொடுப்பேன் என்று கூறி, தான் மறைத்து வைத்திருந்த விஷமருந்து பாட்டிலை எடுத்து குடித்தார்.
 
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆட் டோவில் ஏற்றினர்.
 
அப்போது, மணியனை சூழ்ந்த தேமுதிகவினர், அவரை சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுத்த காவல்துறையினர் மணியனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்