சென்னை, ஆழ்வார் திருநகர் விரிவுப்பகுதியை சேர்ந்த குமாரதேவன் என்பவரின் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, மாநகராட்சி அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வந்து, அவரிடம் வரி கட்டியதற்கான ரசீதுகளை காண்பிக்கக் கூறி இருக்கின்றனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கணேசன் கூறியதாவது. “நான் தே.மு.தி.கவில் முன்னாள் உறுப்பினர். எனது மனைவி சுவீதா பேரணாம்பட்டு தே.மு.தி.க ஒன்றிய கவுன்சிலர். மனைவியை மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் நிற்க வைப்பதற்காக பணம் தேவைபட்டது. அதற்காக இந்த குறுக்கு வழியை தேர்வு செய்தேன்” என கூறியுள்ளார்.
மேலும், காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரனையில், கணேசன் மீது பல கொள்ளை வழக்குகள் இருப்பதும், அவருக்கும் அவரது மனைவிக்கும், மூன்றடுக்கு சொகுசு குடியிருப்புகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், குமாரதேவன் வீட்டில் நடந்த கொள்ளையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர், சுத்திப்பட்டியை சேர்ந்த காந்திராஜன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.