ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ வெங்கட்ராமன் அப்பகுதி மக்களுக்கு மழையால் சேதமடைந்த குடும்ப அட்டைகளுக்கு நகல்களை வழங்கி கொண்டு இருந்தார் அப்போது ஆலந்தூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வடிகால் சரியாக அமைக்கவில்லை என தேமுதிக மேற்கு மாவட்டச் செயலாளர் காமராஜ் புகார் மனு ஒன்றை கொடுக்க வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது அதிமுகவினருக்கும் தேமுதிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.