இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்-திருச்சி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாளை அக், 20 (வ.எண். 06861) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 6 மணிக்கு திருச்சி சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று (அக், 19) தொடங்குகிறது என கூறப்பட்டுள்ளது.