இதனையடுத்து அவர் மீது இந்திய சட்டப்படி, பொது அமைதியை குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் பிரான்சில் இருப்பதால் அவரை காவல் துறையினரால் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண் தமிழச்சிக்கு பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழச்சியின் செயல்பாடுட்டால் தமிழகத்தில் அமைதி கெட்டுவிட்டது என்றும் முடிந்தால் தமிழகத்திற்கு நேரில் வா இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என அவர் சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.