ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது மாவட்ட வாரியாக வழக்கு தொடரப்படும்: தமிழிசை அறிவிப்பு

புதன், 19 ஆகஸ்ட் 2015 (20:18 IST)
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது மாவட்ட வாரியாக வழக்கு தொடரப்படும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
 

 
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இளங்கோவன் மற்றும் குஷ்புவை காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.
 
மேலும் பேசிய அவர் பெண்களை இளங்கோவன் கொச்சைப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்