இந்த இலவச பால் கொடுப்பது குறித்து, அந்தக் கடை உரிமையாளரிடம் கேட்ட போது, எனக்கு சொந்த ஊர் அருப்புகோட்டை பக்கம். தற்போது, மதுரையில் குடும்பத்துடன் வசிக்கிறேன்.
கடந்த சில வருடம் முன்பு, எனது தம்பியின் மனைவி கைக்குழந்தை பாலுக்காக அழுந்துள்ளது. அப்போது, அவர், தனது கைக்குழந்தையுடன், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பாலுக்கு அலைந்துள்ளார். பால் கிடைக்கவில்லை. குழந்தை பசிக்கு ஏங்கி மேலும் மேலும் அழுதுள்ளது.
குழந்தையின் பசியைப் போக்க, ஒரு டீக்கடையில் பால் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. காரணம், கலப்பட பால் தான். இந்த சம்பவம் தான் என் மனதில் மிகுந்த வலியை ஏற்படுத்தியது. எனவே தான், கைக்குழந்தைகளோடு வரும் தாய்மார்களுக்கு மட்டும் கலப்படம் இல்லாத நல்ல பாலை இலவசமாக வழங்குறேன் என்றார்.