அப்போது, எந்த சூழலில் பிளவு பட்டு கட்சி உடைய கூடாது எனவும், கட்சிக்கு துரோகம் இழைத்த பன்னீர்செல்வத்தை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் சசிகலா ஆதரவாளர்களிடம் கூறியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதற்காக அவர் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் சில எம்எல்ஏக்களுடன் பேசியதாக தகவல்கள் வருகின்றன. தங்களுக்கு உரிய முக்கியத்துவம், பதவிகள் வழங்கப்படும் என பிரிந்து சென்ற எம்எல்ஏக்கள், எம்பிக்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க ஓபிஎஸ் தரப்பும் வாக்குறுதிகள் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.