இதற்கு முன்னர் பலமுறை தினகரன் சந்தித்தாலும், இந்த முறை பாஜக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்து அதிமுகவிடம் ஆதரவு கேட்ட பின்னர் சசிகலாவை தினகரன் சந்திக்க சென்றிருந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.
ஆனால் சசிகலாவை சந்தித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், சித்தி என்ற முறையில் சசிகலாவை சந்திக்க வந்துள்ளேன். அவரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார். மேலும் குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்தும் எதுவும் ஆலோசிக்கவில்லை. குடியரசுத்த லைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பது குறித்து சசிகலா முடிவு செய்வார் என கூறினார்.