இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது புகைப்படத்தை வெளியிடவும், அவர் பேசும் ஆடியோ வெளியிடவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவரை சந்திக்க வந்த ஆளுநர், மத்திய அமைச்சர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவரது மரணத்தில் பலரும் சந்தேகங்களை எழுப்பினர்.
இதற்கு கடந்த ஜனவரி 27-ஆம் தேதியில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில் NO INFORMATION AVAILABLE ON RECORDS என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் கௌதமி பொய் கூறினாரா அல்லது தவறான முகவரிக்கு கடிதம் அனுப்பினாரா, எந்த நாட்டு பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினார் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்த தகவலை பெற்ற தீபக் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.