எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணிகள் இணைந்ததும் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செய்து வரும் செயல்கள் டெல்லியை கோபமடைய வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் தினகரனுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வரும் எனவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனையடுத்து தன்னை நீக்க தினகரனுக்கு அதிகாரமில்லை, அவரை நாங்கள் ஏற்கனவே நீக்கிவிட்டோம் என வைத்திலிங்கம் பதலடி கொடுத்தார். இதனையடுத்து தஞ்சாவூரில் வைத்திலிங்கம் ஆதரவாளர்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
ஆடிட்டரை சந்தித்த வைத்திலிங்கம் விரைவில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சொல்லி, சசிகலா பொதுச்செயலாளரும் இல்லை, தினகரன் துணைப் பொதுச்செயலாளருமில்லை என அறிவித்து தினகரனின் ஆட்டத்துக்கு முடிவுகட்ட கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் வைத்திலிங்கத்தை கட்சியில் இருந்து நீக்கியது டெல்லி வரை எதிரொலித்ததாகவும், விரைவில் தினகரனுக்கு செக் வைக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகிறது.