'கத்தி' திரைப்படத்தில் 2ஜி ஊழல் வழக்கு குறித்த வசனம் உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி மாரீஸ்வரி, நடிகர் விஜய், படத்தின் இயக்குனர் முருகதாஸ், லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.