முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அடுத்த தலைவர் யார் என்பதில் பொதுமக்கள் மத்தியிலுமின்றி அதிமுக தொண்டர்களிடமும் குழப்பம் நீடித்தது. சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு நடைபெற்றதாக தெரியவில்லை. காரணம் சசிகலாவை தலைவராக ஏற்க அதிமுகவிலும் எதிர்ப்புகள் எழுந்தவண்ணமே உள்ளன. பல பகுதிகளில் அவரது உருவப்படம் அடங்கிய பேனர்களை கிழித்து தொண்டர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய நபர்களிடம் தீபா விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் பேசும்போது, சசிகலா எம்.எல்.ஏ. ஆனால்தான் முதல்வராக நீடிக்க முடியும். அவர் எங்கு போட்டியிட்டாலும் அங்கு போட்டியிடுவேன். என்னை பற்றி மக்களுக்கு தெரியும். குறிப்பாக பெண்கள் ஆதரவு நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்று கூறினாராம்.