செய்தியாளர்கள் சந்திப்பின் போது தீபா தனது அத்தை ஜெயலலிதாவை பணத்துக்காக தனது தம்பி தீபக்கும், சசிகலாவும் திட்டமிட்டு கொன்றதாக பகீர் குண்டை தூக்கி போட்டார். தீபா இப்படி கூறியதற்கு காரணம் இருப்பதாக தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனில் தீபாவை ராஜம்மா பார்த்ததும் கத்தியபடியோ ஏதோ சொல்ல ஓடி வந்துள்ளார். ஆனால், அவரிடம் பேசி விசாரிப்பதற்குள் போயஸ் கார்டனில் இருந்த செக்யூட்டிகள் தீபாவை வெளியேற்றி விட்டார்கள். இவ்வாறு தீபா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.