தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொருட் சேதமும் ஏற்பட்ட அதே நேரத்தில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது மழை தொடங்கியதில் இருந்து இதுவரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, மின்சாரம் பாய்ந்தது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இதுவரை மழைக்கு 176 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மழையால் உயிரிழிப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால், பட இடங்களில் இயல்பு நிலை இன்னும் திரும்ப வில்லை மற்றும் ஆறு, ஏரி, கால்வாய் மற்றும் குளங்களில் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டு செல்கிறது,