2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்ட விவகாரத்தில், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக மத்திய அமலாக்கப்பிரிவினர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் மேலாண்மை இயக்குனர் சரத்குமார் ரெட்டி, பி.அமிர்தம், சுவான் டெலிகாம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, உள்ளிட்ட 10 தனி நபர்களின் பெயர்களும் சுவான் டெலிகாம், குஸேகோன் ரியல்டி, சினியுக் மீடியா, கலைஞர் டி.வி. உள்ளிட்ட 9 நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.