இதனால் அப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெரும் பதற்றம் நீடித்து வந்தது. இந்த புலியை பிடிக்க அப்பகுதியில் 5 இடங்களில் கூண்டுகளும், 30 இடங்களில் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டது. இதில் 10 கேமராக்களில் புலியின் நடமாட்டம் பதிவானது.
இந்த புலியை பிடிக்க சிறப்பு அதிரடிப் படையினர், வனத் துறையினர், ஆயுதப் படையினர் என 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 8 நாளாக இந்த குழுக்கள் புலியை பிடிக்க போராடி வந்தது. இந்நிலையில் இன்று அந்த புலி அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அதிரடிப்படை வீரர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.